Posts

Showing posts from 2025

MY PUBLICATIONS

Image
 

சிதம்பரம்

Image
சிதம்பரம்   

நெல்லின் வகைகள்

Image
                                                                      நெல்லின் வகைகள் மேலைச் சாளுக்ய மன்னன் மூன்றாம் சோமேச்வரன் விக்ரம சோழனுக்குச் சமகாலத்தவன். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். பல்கலை வித்தகன். அவன் எழுதிய மானஸோல்லாஸம் என்னும் ஒரு நூல் கலைக்களஞ்சியமாகப் போற்றப்பெறுகிறது. கர்ணாடக இசை, கட்டிடக்கலை, தாவரவியல், விலங்கியல், விலங்கு மருத்துவம், அரசியல், நிர்வாகம் ஆகியவற்றிற்கு மிகச் சிறந்த நூலாக இதைச் சொல்லலாம். தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்பாக எழுதப்பெற்ற இந்த நூலில் எட்டுவகையான நெற்பயிர்கள் குறிப்பிடப்பெற்றிருக்கின்றன. அவையாவன 1. மஹாசாலி 2. ரக்த சாலி 3. ஸ்தூல சாலி 4. ஸூக்ஷ்ம சாலி 5. கந்த சாலி 6. கலிங்க சாலி 7. ஷாஷ்டிக சாலி  8. முண்ட சாலி சாலி என்றால் நெல்லைக் குறிக்கும் வடமொழிச்சொல். நெல்வேலியைச் சாலிவாடி என்று வடமொழியிற்குறிப்பர். இவற்றுள் மஹாசாலி என்பது பெரிய அளவிலான நெல். ரக்த சாலி என்பது ...

ப்ரஹ்மதேயம்

Image
                                                                        ப்ரஹ்மதேயம் அந்தணர்களுக்கு அளிக்கப்பெற்ற இறையிலி நிலங்கள் ப்ரஹ்மதேயம் எனப்பெற்றது. இந்தச் சொல்லாட்சி அர்த்தசாஸ்த்ரத்திலும் பௌத்த நூல்களிலும் கூட பயின்று வந்துள்ளது. அர்த்தசாஸ்த்ரம் அரசன் ப்ரஹ்மதேயங்களை வழங்கவேண்டும் என்கிறது. நாகசாமி அவர்கள் ப்ரஹ்மதாயம் என்பதே சரியான சொல்லாட்சி என்கிறார். அது பொருந்தாது. ப்ரஹ்மதேயம் என்ற சொல்லாட்சியே சரியானது. தமிழகத்திலும் இத்தகைய ப்ரஹ்மதேயங்கள் பன்னெடுங்காலமாக இலங்குகின்றன. வேள்விக்குடிச் செப்பேடு பாண்டியருள் வரலாற்று அரசர்களில் பழையோனான பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி நற்கொற்றன் என்னும் அந்தணனுக்கு வேள்விக்குடியை வழங்கியதாகவும் இடையில் களப்ரர் இறங்கலால் அது அற்றுப் போக நற்கொற்றன் வழியில் வந்த நற்சிங்கன் அதனைக் கேட்டுப் பெற்றதாகக் கூறுகிறது. ஆக பொயுமு மூன்று-இரண்டாம் நூற்றாண்டுகளிலிருந்தே அந்தணருக்கு இ...

கோப்பெருஞ்சிங்கன்

Image
                                                        கோப்பெருஞ்சிங்கன்   சோழர்களின் சாதி என்ன? அவர்களின் சாதி இது என கூற எதாவது சான்றுகள் உண்டா? என்பதற்கான பதிலை கீழே காண்போம் - கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் குலோத்துங்கன் மகளை தில்லையில் திருமணம் செய்தவன் என்பததை செய்யாறு கல்வெட்டு குறிப்பிடுகிறது - "பல்லவர்கோன் செந்தளிர்க் கைகோத் தபையன் மகளுடன் தில்லையுலா வந்தளிக் கும்பெரு மான்வெற்பர் மாதை மணஞ்செய்யவே"(A.R.E No.140, 1939-40) இதனால் மூன்றாம் குலோத்துங்கனின் மகனான மூன்றாம் இராஜராஜ சோழன் கோப்பெருஞ்சிங்கனுக்கு "மாப்பிள்ளை" முறை ஆகும், அதாவது மூன்றாம் இராஜராஜனின் சகோதிரியின் கணவர் கோப்பெருஞ்சிங்கர்  அடுத்து வயலூரில் உள்ள கல்வெட்டு கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது - "பெருங்களிற்றுச் சோழனையும் மைச்சரையும் பிடித்துச் சிறையிலிடக் களிறுவிடு மிண்டன் சீயா"(Epigraphia Indica, Volume - 28, page - 174 - 182) களிறு - யானை, சீயா - சிங்கம் இதே கல்வெட்டில் மற்...

வளஞ்சியர்

Image
  தனுஷ்கோடியில் மாயமான வட்டெழுத்து கல்வெட்டுப் பற்றிய தகவல்கள் - வணிகர் கல்வெட்டு தனுஷ்கோடி காட்டுப்பகுதியில் சிதைந்து மண்மூடிய காளி கோயில் அருகே உள்ள முனீஸ்வரர் கோயிலில் சூலம் அருகே சூடம் ஏற்றும் கல்லாக இச்சதுரத் துண்டுக்கல் உள்ளது. கல்வெட்டின் ஒரு சிறு பகுதியே உள்ள போதும் நல்ல 8 ஆம் நூற்றாண்டு வட்டெழுத்து அமைதியில் இக் கல்வெட்டுள்ளது. வணிகக் குழுக்கள் பற்றிய குறிப்பும் உள்ளது. 1. வரும் ச 2. ஸமீசுவரத்து வூரோ  3. ம் வளஞ்சிய 4. திசையாயி 5. ... இலங்கை மற்றும் பாண்டிய அரசுகளுக்கானத் தொடர்பின் பின்னணியில் வணிகர்களின் நடவடிக்கைகளே முன்நிற்பன. இது துண்டுக் கல்வெட்டானாலும் 'ராமேசுவரம்', 'வளஞ்சியர்', 'திசையாயிரத்தவர்' குறித்த சொற்களைக் கொண்டுள்ளமை சிறப்பாகும். அதுவும் ஒரு காளி கோயில் பகுதியில் கிடைப்பதும் இன்னும் சிறப்பாகும். வளஞ்சியர், திசையாயிரத்தவர் வணிகக் குழுவினரே. முற்காலப் பாண்டியர் கலைப்பாணியில் காளியின் செப்புத் திருமேனி ஒன்று இன்றும் இராமேஸ்வரத்தில் இராமர் இலக்குமணர், சீதை, அனுமன் குழுச் செப்புத் திருமேனிகளுடன் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இராமேசுவரம் இடைக்காலப்...

ஜாவாவின் கங்கைக் கல்வெட்டு

Image
                                       ஜாவாவின் கங்கைக் கல்வெட்டு கிழக்காசிய நாடான ஜாவாவிலும் பல வடமொழிக்கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. அவற்றிலொன்று ஜாவாவின் மையத்தில் சோக்ரோ மாவட்டத்தில் தேச லெபக் என்னுமிடத்திலுள்ளது. அந்தக் கல்வெட்டு அங்குள்ள ஆற்றை கங்கையோடு ஒப்பிடுகிறது.  ...ஸு²ச்யம்பு³ருஹானுஜாதா க்வசிச்சி²லாவாலுகனிர்க³தேயம்|  க்வசித்ப்ரகீர்ண்ணா ஸு²ப⁴ஸீ²ததோயா ஸம்ப்ரஸ்ருதா மேத்⁴யகரீவ க³ங்கா³ சில இடங்களில் தூய தாமரைகளோடு கூடியதும் சில இடங்களில் கற்களும் மணலும் இயைய வெளிப்பட்டவளாகவும் சில இடங்களில் பிரிந்தவளாகவும் நன்மைதரும் குளிர்ந்த நீரைக் கொண்டவளாக புனிதமாக்கும் கங்கையையொத்தவளாய்ச் செல்கிறாள்.. இந்தக் கல்வெட்டு ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியைச் சேர்ந்தது. பல்லவர் தம் க்ரந்த லிபியை ஒட்டிய வரிவடிவத்திலமைந்தது. இதற்கு மேல் சங்கம், சக்ரம், சூலம், பரசு போன்ற ஆயுதங்களும் இடம்பெற்றுள்ளன.

வெள்ளைக்குடி

Image
  "உழுபடையும் - பொருபடையும்." 2300 ஆண்டுகளுக்கு முந்தைய  சங்ககாலம். சோழநாட்டைச் சேர்ந்த வெள்ளைக்குடி என்னும் பெயருடைய ஒரு சிற்றூர்.                                                                    அந்த வருடம் வழக்கத்திற்கு மாற்றாய் பெருமழை பெய்தது. அளவுக்கதிகமான மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த விளை நிலங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. விவசாயிகளுக்குப் பேரிழப்பு. விளைந்து முற்றிய நெற்கதிர்கள்  அனைத்தும் பெரும் வெள்ளத்தில் மிதக்கின்றன. உழுகுடிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. அடுத்த என்ன செய்வது.? இதை எவ்வாறு சரிசெய்வது.?  இக்கட்டான சூழல்.  வெள்ளநீரை அகற்றி நிலத்தை சுத்தம் செய்து மீண்டும் உழுது பயிரிடவேண்டும். பொருளாதார உதவி வேண்டும். உழுகுடிமக்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்தார்கள். தங்கள் நிலமையை அரசனிடம் எடுத்துக்கூறி  தங்களுக்கு அரசு உதவி கிடைக்குமாறு பரிந்துரை செய்யவேண்டும் என்று முடி...

குரவை தழீஇ, யாம், மரபுளி பாடி

Image
                                                  குரவை தழீஇ, யாம், மரபுளி பாடி   தேயா விழுப் புகழ்த் தெய்வம் பரவுதும் மாசு இல் வான் முந்நீர்ப் பரந்த தொல் நிலம் ஆளும் கிழமையொடு புணர்ந்த எம் கோ வாழியர், இம் மலர் தலை உலகே " இப்படி நடைபெறும் ஏறு தழுவல் போரை மரபாகக் கொண்டவர்கள் நாம். இதனை நாம் பாடிக்கொண்டு குரவை தழுவி ஆடுவோம். பாடும்போது தேயாத விழுமிய புகழை உடைய தெய்வத்தைப் போற்றுவோம். கடலால் சூழப்பட்டிருக்கும் இந்த நிலத்தை  ஆண்டுவரும் எம் அரசன் வாழ்க .. மலர்ந்துகொண்டே இருக்கும் இந்த உலகம் வாழ்க ... நன்றி மா.மாரிராஜன். 4000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறைஓவியம். இடம் - மதகடிப்புதூர்.

பெருவெழி கல்வெட்டு

Image
                                                    பெருவெழி கல்வெட்டு    கோயம்புத்தூர் மாவட்டம் கோவை புதூருக்கு அருகிலுள்ள வனத்தில் ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமையான கல்வெட்டு ஒன்றுள்ளது. பெருவெழியில் பயணிக்கும் மக்களை, வணிக பண்டங்களை பாதுகாக்கும் பொருட்டு சோழ மன்னன் முதலாம் ஆதித்தன் ஒரு நிழற்படை அமைத்து பாதுகாத்த செய்தி அதில் பதிவாகியுள்ளது. கல்வெட்டில்  "இராசகேசரி பெருவழி" என்றே அப்பெருவழி குறிக்கப்பட்டுள்ளது.   ஈராயிரம் ஆண்டுகள் பழமையான பாதைகள் பற்றிய குறிப்புகள் 'அர்த்த சாஸ்திரம்' நூலில் வருகின்றது. அவை 'தட்சின பெருவெழி' என்றும் அது வடக்கில் தக்காணத்தில் இருந்து தெற்கே தமிழகத்தின் கடைக்கோடி வரையில் தர்மபுரி, கரூர் வழியே பயணித்து அடைந்ததாக கூறுகிறது. இதற்கு இணையான ஒரு பெருவழி சீனாவில் துவங்கி இந்தியா,‌ அரேபியா வழியாக ஐரோப்பிய நாடுகளை இணைக்கும் 'பட்டு பெருவழி' இருந்தது.   இந்த பெருவழிகள் அனைத்தும் வணிக பயணங்களை எளிமையாக்கியத...

இரும்பு

Image
  இரும்பை கண்டுபிடித்தவர் யார் என கேட்டால் விடையாக Henry Bessmer, Engaland - 1856 என்று தானே சொல்வோம் ... ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்துள்ள முதுமக்கள் தாழி, எலும்பு கூடுகள், இரும்பு மற்றும் பித்தளை பொருட்கள், கலைப்பொருட்கள், ஆயுதங்கள், தங்க ஆபரணங்கள் போன்றவை கிறித்து பிறப்பிற்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை.  அதில் ஒரு பொருளின் அகவை கி.மு.905, மற்றொரு பொருளின் அகவை கி.மு.791 என்றும் தெரியவந்துள்ளது. அதாவது கி.மு 10 – ஆம் நூற்றாண்டு மற்றும் கி.மு.8 – ஆம் நூற்றாண்டு என்கிறது (CARBON -14. TEST) ஆய்வறிக்கை. கி.மு. 8 - ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழன் நாகரீகத்தோடு வாழ்ந்திருகின்றான். உலோக பொருட்களையெல்லாம் கையாண்டு இருக்கின்றான். அதிலும் குறிப்பாக ‘இரும்பு’ அவன் வாழ்வியலோடு ஒன்றர கலந்திருக்கிறது என்பதெல்லாம் நமக்கு வியப்பான செய்திகள். ‘இரும்பு வடித்தன்ன கருங்கைக் கொல்லன்(கம்மாளர் சமூகம்) ‘இரும்பு வடித்தன்ன மடியா மென்தோல் கருங்கை வினைஞர் காதலம் சிறாஅர்.’ - என  பழந்தமிழர்களுக்கும் இரும்புக்குமான உறவை எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் பறைச்சாற்றுகிறது.  ‘அதியமான் நெடுமான் ...

கத்தரிக்கோல்

Image
                                                         மயிர் குறை கருவி  நாம்  முடிவெட்ட பயன்படும் கத்தரிக்கோல்தான். Scissors. இந்த சொல்லும் இந்தக் கருவியும் சங்ககாலத் தமிழர் வழக்கில் இருந்தது. கத்தரிக்கோலை கண்டுபிடித்தது யார்.? எப்போது பயன்பாட்டுக்கு வந்தது என்ற தேடல் ஒரு பக்கம் இருக்கட்டும்.. தமிழர்கள் சங்க காலத்திலேயே கத்தரிக்கோலை முடி வெட்ட  பயன்படுத்தினார்கள்  என்பதுதான் சிறப்பான விடயம். அதன் பெயர்தான் "  மயிர் குறை கருவி" சங்க இலக்கியமான  பொருநர் ஆற்றுப்படை.. முடத்தாமக்கண்ணியார் பாடியது.. யாழிசைத்துப் பாடும் ஒரு  பாடினியை வர்ணிக்கும் போது இவ்வாறு கூறுகிறார்.. பாடினி எவ்வாறு இருந்தாளாம்.? கருமையான கூந்தலும் பிறைபோல் நெற்றியும் கொலை வில் போன்று வளைந்த புருவம் இனிய மொழி பேசும் செந்நிற இதழ் கொண்ட வாய், முத்துக்களை வரிசையாக அடுக்கி வைத்தாற்போல் வெண் பற்கள், மயிரை நறுக்குகின்ற கருவியின் கைப்பிடிபோல் உள்ள காத...

தஞ்சை பெரியகோவில் கல்வெட்டுகள்

Image
                                                                     " கணித அறிவு " தஞ்சை பெரியகோவில் கல்வெட்டுகள்.. இராஜராஜசோழனது கல்வெட்டு எண்ணிக்கை  மட்டும் 64. ஒவ்வொறு கல்வெட்டும் மிக நீண்ட செய்தியை பதிவு செய்கிறது. 738 வரிகளும் 14000 க்கும் மேற்பட்ட எழுத்துக்களும் கொண்ட கல்வெட்டுகள். இவற்றுள் வரிக்கு ஒன்றிரண்டு கிரந்த எழுத்துக்களைத் தவிர்த்து அத்தனையும் தமிழ் எழுத்துக்கள். அனைத்துக் கல்வெட்டுகளும் அழகான தமிழ் எழுத்துக்களில்தான் வெட்டப்பட்டுள்ளன. ஒவ்வொறு எழுத்தும் அவ்வளவு அழகாக ஒரு நேர்கோட்டில் மிகத் தெளிவாக வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டுச் செய்திகள் ஒவ்வொன்றும் ஒரு ஆவணம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் மக்களின் வாழ்வியல் சூழலை பதிவு செய்யும் ஆதாரக் கல்வெட்டு சாசனங்கள் இவை. 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சமூக சூழல் , மக்களின் வாழ்வியல்,  அவர்களின் பொருளாதாரம், அவர்களின் உணவு, அவர்களின் தொழில், அவர்களி...