குரவை தழீஇ, யாம், மரபுளி பாடி
குரவை தழீஇ, யாம், மரபுளி பாடி
தேயா விழுப் புகழ்த் தெய்வம் பரவுதும்
மாசு இல் வான் முந்நீர்ப் பரந்த தொல் நிலம்
ஆளும் கிழமையொடு புணர்ந்த
எம் கோ வாழியர், இம் மலர் தலை உலகே "
இப்படி நடைபெறும் ஏறு தழுவல் போரை மரபாகக் கொண்டவர்கள் நாம். இதனை நாம் பாடிக்கொண்டு குரவை தழுவி ஆடுவோம். பாடும்போது தேயாத விழுமிய புகழை உடைய தெய்வத்தைப் போற்றுவோம். கடலால் சூழப்பட்டிருக்கும் இந்த நிலத்தை ஆண்டுவரும் எம் அரசன் வாழ்க .. மலர்ந்துகொண்டே இருக்கும் இந்த உலகம் வாழ்க ...
நன்றி
மா.மாரிராஜன்.
4000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறைஓவியம்.
இடம் - மதகடிப்புதூர்.
Comments
Post a Comment